search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து பெற்றோரே கொலை செய்தது அம்பலம்
    X

    மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து பெற்றோரே கொலை செய்தது அம்பலம்

    10-ம் வகுப்பு மாணவி தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெற்றோரே கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது 50). இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகள் அன்னலட்சுமி (16). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 7-ந் தேதி அன்ன லட்சுமி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அன்னலட்சுமி ஏன் தற்கொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிவில், அன்னலட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய மேல் விசாரணையில், அன்னலட்சுமியை அவரது பெற்றோரே கொலை செய்து, பின்னர் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது உறுதியானது.

    இதனைத் தொடர்ந்து ஞானவேல் மற்றும் சீதாலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

    அன்னலட்சுமி, சிலருடன் பழகியது பிடிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்காததால் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×