search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ

    அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.

    மேலும், டெங்குவை விட மோசமானது தி.மு.க என்று அவர் விமர்சித்தார். சசிகலா பரோல் குறித்தான கேள்விகளுக்கு பதிலளித்த அவர்:-

    அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் இருந்தாலும், தற்போது வெளிப்படுத்த முடியாமல் அனைத்தையும் அடக்கி கொண்டுள்ளேன். இன்றைய சூழலில் சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருக்கிறேன்.

    இவ்வாறு கூறினார்.

    பரோலில் வந்த சசிகலாவை அமைச்சர்கள் யாரும் போய் பார்க்க மாட்டோம் என நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×