search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
    X

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு ஆந்திராவின் கடல் பகுதியில் இருந்து கன்னியாகுமரி கடல் பகுதி வரை தமிழக கடல் பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.

    வழிமண்டலத்தின் நடுப்பகுதியில் அந்தமான் கடல் பகுதியில் இருந்து லட்சத்தீவு வரையிலும் வட தமிழகம் வழியாக கிழக்கு காற்றும், மேற்கு காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 3 செ.மீட்டரும், ஓசூர்,  பரமத்திவேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×