search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண ஆசை காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஜே.சி.பி. டிரைவர் கைது
    X

    திருமண ஆசை காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஜே.சி.பி. டிரைவர் கைது

    திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜே.சி.பி. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    வாடிப்பட்டி:

    சமயநல்லூர் அருகே உள்ள பரவை வளர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சந்தியா (வயது 20). 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சாலை வேலை நடந்தபோது அந்த பணிக்காக ஜே.சி.பி. வாகனம் வந்தது. அதன் டிரைவர் ராம்குமார் (22) மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர்.

    இவருக்கும் சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உறவு வைத்துக் கொண்டார்.

    ஆனால் அதன் பிறகு ராம்குமார் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி ஆகியோர் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×