search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண்- சிறுமி பலி
    X

    புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண்- சிறுமி பலி

    டெங்கு காய்ச்சலால் பெண்- சிறுமி பலியான சம்பவம் புதுக்கோட்டை பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மட்டாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மனைவி அம்பிகாபதி (வயது 45). இவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்பிகாபதி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அம்பிகா பதி இறந்தார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதே போல புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள காசிம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் ராதிகா(13). ராதிகாவிற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவரது தாயார் லோகாம்பாள் கீரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ராதிகாவை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே ராதிகா பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் பெண்- சிறுமி பலியான சம்பவம் புதுக்கோட்டை பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×