search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெற்றவர்கள் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
    X
    சிகிச்சை பெற்றவர்கள் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ஒரே நாளில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 7 பேருக்கு நவீன காது சிகிச்சை

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 7 பேருக்கு எண்டோஸ்கோப்பி கருவி மூலம் காது உள் நுண்ணோக்கி அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.
    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 450 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    மேலும் எண்டோஸ்கோப்பி நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இங்கு ஒரே நாளில் 7 பேருக்கு எண்டோஸ்கோப்பி கருவி மூலம் காது உள் நுண்ணோக்கி அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.

    காது கோளாறுக்காக சிகிச்சைக்கு வந்திருந்த முருகேஸ்வரி, ராஜேஸ்வரி, முருகன், சுகன்யா, மோகன், கவுசல்யா, பத்மா ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    பேராசிரியர் சங்கர் தலைமையிலான டாக்டர்கள் அந்தோணி, முத்துசித்ரா ஆகியோரை கொண்ட குழுவினர் மிக நுட்பமான இந்த நவீன சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். வலி, ரத்தம் இல்லாமல் சிகிச்சை அளித்தனர்.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:-

    ஸ்டான்லி மருத்துவமனையில் காது கோளாறுக்கு சிகிச்சை அளிக்க நான்கு நவீன கருவிகள் உள்ளன. சிகிச்சைக்காக 4 டாக்டர்கள் குழு செயல்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் பெற ரூ.2 லட்சம் வரை செலவாகும்.

    ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்கிறோம். முருகேஸ்வரி என்ற பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்தது. காதுக்குள் உள்ள தசைகள் எலும்புகள் போல் இருந்ததால் அதை சரி செய்து தற்போது அவர் குணம் பெற்றுள்ளார். இந்த சிகிச்சை பெற்றவர்கள் அடுத்த நாளே வீட்டுக்கு செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ஆர். எம்.ஓ.ரமேஷ், டாக்டர்கள் தனசேகர், செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×