search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே விபத்து: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி மனைவியுடன் பலி
    X

    சேலம் அருகே விபத்து: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி மனைவியுடன் பலி

    சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி மனைவியுடன் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்ககிரி:

    சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சின்ன தம்பி (வயது 60). இவர் வனத்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தமிழரசி (55).

    சின்னதம்பியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சங்ககிரி தொழிற்பேட்டையை அடுத்த கணக்கன்காடு பகுதி ஆகும். இன்று காலை கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். காலை 11-15 மணிக்கு சங்ககிரி அருகே சேலம்-கோவை பை-பாஸ் ரோட்டில் சின்னகவுண்டர் பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் கணவன்- மனைவி இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த சின்ன தம்பி-தமிழரசி ஆகியோருக்கு ராஜசேகரன் என்ற மகனும், ஷோபனா என்ற மகளும் உள்ளனர். இதில் மகன் ராஜசேகரன் சேலம் அம்மாப்பேட்டையில் பல் டாக்டராக உள்ளார்.
    Next Story
    ×