என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் குடோனில் பதுக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையம் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி அதனை விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால் பெரும்பலான கடைகளில் புகையிலை விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகில் உள்ள முருகபவனம் பகுதியில் குட்கா, கூல் லிப் போன்ற புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர் மாரிமுத்து தலைமையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் பண்டல்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் புகையிலை பொருட்களையும், 2 வேன், 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்