என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே மாயமான பிளஸ்-2 மாணவி கொலை?: காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை
Byமாலை மலர்22 Sep 2017 9:30 AM GMT (Updated: 22 Sep 2017 9:30 AM GMT)
கூடலூர் அருகே மாயமான பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்டரா என்பது குறித்துகாதலனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கீழ்நாடுகாணியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரம்யா (வயது 17). இவர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராஜ்குமார்(வயது 20).
இவர் திருப்பூரில் ஓட்டல் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். மாணவி ரம்யாவும், ராஜ்குமாரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி ரம்யா மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை காணவில்லை.
இதற்கிடையே மாணவியின் காதலன் ராஜ்குமார் ஊரில் உள்ள சிலரிடம் ரம்யா விஷம் குடித்து இறந்துவிட்டதாகவும், அவரது உடல் தமிழக - கேரள வனப்பகுதியில் கிடப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கீழ்நாடுகாணியை சேர்ந்த கிராமமக்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மாணவி ரம்யா இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கிராமமக்கள் தேவாலா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்த மாணவி ரம்யாவின் கழுத்தில் ரத்த காயம் இருந்தது. எனவே மாணவியை கொலை செய்து விட்டு விஷம் குடித்து இறந்ததாக ராஜ்குமார் நாடகமாடுவதாக கூறி மாணவியின் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர்.
அவர்கள் ராஜ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று கோரியும், மாணவியின் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உடலை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கீழ்நாடுகாணியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரம்யா (வயது 17). இவர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராஜ்குமார்(வயது 20).
இவர் திருப்பூரில் ஓட்டல் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். மாணவி ரம்யாவும், ராஜ்குமாரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி ரம்யா மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை காணவில்லை.
இதற்கிடையே மாணவியின் காதலன் ராஜ்குமார் ஊரில் உள்ள சிலரிடம் ரம்யா விஷம் குடித்து இறந்துவிட்டதாகவும், அவரது உடல் தமிழக - கேரள வனப்பகுதியில் கிடப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கீழ்நாடுகாணியை சேர்ந்த கிராமமக்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மாணவி ரம்யா இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கிராமமக்கள் தேவாலா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்த மாணவி ரம்யாவின் கழுத்தில் ரத்த காயம் இருந்தது. எனவே மாணவியை கொலை செய்து விட்டு விஷம் குடித்து இறந்ததாக ராஜ்குமார் நாடகமாடுவதாக கூறி மாணவியின் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர்.
அவர்கள் ராஜ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று கோரியும், மாணவியின் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உடலை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X