search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி
    X

    திண்டுக்கல் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி

    திண்டுக்கல் அருகே மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 வயது குழந்தை பரிதாபமாக பலியானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பழனிசாலையில் உள்ள ராமையன்பட்டி கணேசபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அகிலேஸ்வரன் (வயது2). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான்.

    இன்று காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அகிலேஸ்வரனை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சிகிச்சை பலனில்லாமல் அகிலேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். திண்டுக்கல் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மர்மகாய்ச்சல் பரவி வருகிறது. இதனால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

    நகர் பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் மர்மகாய்ச்சல் வேகமாக பரவுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×