என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூரில் மாநகர பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்21 Sep 2017 7:37 AM GMT (Updated: 21 Sep 2017 7:37 AM GMT)
மீஞ்சூரில் மாநகர பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த பட்ட மந்திரி பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (18). தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். இவரது நண்பர் நவீன் (17). ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூரில் இருந்து பட்டமந்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மீஞ்சூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே முன்னால் சென்ற தனியார் கம்பெனி பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய போது எதிரே வந்த மாநகர அரசு பஸ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காமேஷ் உடல் நசுங்கி இறந்தார்.
படுகாயம் அடைந்த நவீனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X