என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊட்டி அருகே கணவரின் இறுதி சடங்கில் மனைவி மயங்கி விழுந்து மரணம்
ஊட்டி:
ஊட்டி அருகே உள்ள சோலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிக்காரி (வயது 76). இவர் எச்.பி.எப். தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பொன்னியம்மாள் (66). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, ராஜசேகர் ஆகிய 2 மகன்களும், வசந்தா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிக்காரி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனது மகள் வசந்தா வீட்டில் தங்கி இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிக்காரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மகள் வீட்டிலேயே இறந்து விட்டார். கணவர் அருகில் இருந்து பணிவிடை செய்து வந்த அவருடைய மனைவி பொன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். கணவர் இறந்ததை அறிந்து கதறி அழுதார்.
பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான சோலூர் கிராமத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள், உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்.
சிக்காரியின் உடல் கிராமத்தில் இறுதி சடங்கு செய்யும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது சிக்காரியின் உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்த இருந்த அவரது மனைவி பொன்னியம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறி போன உறவினர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தனர். ஆனால் அவர் மயக்கம் தெளியவில்லை.
பின்னர் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒரு தனியார் வாகனம் மூலம் ஊட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பொன்னியம்மாளை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அவரது உடல் சோலூர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. தந்தையும், தாயையும் பறிக்கொடுத்ததால் அவரது மகன்களும், மகளும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கணவன்-மனைவி இருவரும் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். பின்னர் இருவரது உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப் பட்டது.
சோலூர் கிராமத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்து, சாவிலும் இணை பிரியாமல் இறந்தது அப்பகுதி கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்