என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் 3 மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ. திடீர் சோதனை
Byமாலை மலர்20 Sep 2017 8:43 AM GMT (Updated: 20 Sep 2017 8:43 AM GMT)
புதுவையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ. திடீர் சோதனை நடத்தினார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
சென்னையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ஒன்று இன்று புதுவை வந்தது. அவர்கள் 3 பிரிவாக பிரிந்து புதுவையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளுக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள். 3 கல்லூரியில் உள்ள அலுவலகங்களுக்கும் சென்று அங்குள்ள கோப்புகளையும், கம்ப்யூட்டர் சாதனங்களையும் ஆய்வு செய்தனர்.
மருத்துவ கல்லூரிகளுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளி காலத்திலும் மத்திய மருத்துவ கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது மருத்துவ கவுன்சில் விதிமுறைகள்படி கல்லூரியை வைத்திருக்க வேண்டும்.
இதை ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து அதிகாரிகள் வருவார்கள். இதில் தவறு நடந்ததாக மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில் புதுவையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளிலும் விசாரணை நடந்ததாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X