search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் 3 மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ. திடீர் சோதனை
    X

    புதுவையில் 3 மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ. திடீர் சோதனை

    புதுவையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ. திடீர் சோதனை நடத்தினார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    சென்னையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ஒன்று இன்று புதுவை வந்தது. அவர்கள் 3 பிரிவாக பிரிந்து புதுவையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளுக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள். 3 கல்லூரியில் உள்ள அலுவலகங்களுக்கும் சென்று அங்குள்ள கோப்புகளையும், கம்ப்யூட்டர் சாதனங்களையும் ஆய்வு செய்தனர்.

    மருத்துவ கல்லூரிகளுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளி காலத்திலும் மத்திய மருத்துவ கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது மருத்துவ கவுன்சில் விதிமுறைகள்படி கல்லூரியை வைத்திருக்க வேண்டும்.

    இதை ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து அதிகாரிகள் வருவார்கள். இதில் தவறு நடந்ததாக மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில் புதுவையில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளிலும் விசாரணை நடந்ததாக தெரிகிறது.

    Next Story
    ×