என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பா.ம.க. பிரமுகர் வீடு சூறை: கார் கண்ணாடி உடைப்பு
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். பா.ம.க. ஒன்றிய தொழிற் சங்க தலைவராக உள்ளார். நேற்று காலை அவர் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் 7 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
திடீரென அவர்கள் பாஸ்கரின் வீட்டு மீது கற்களை வீசி தாக்கினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் வீட்டுக்கதவை உள்பக்கம் பூட்டி ஒரு அறையில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார்.
ஆவேசம் அடைந்த மர்ம கும்பல் வீட்டுமுன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகளை நொறுக்கினர். பின்னர் பாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்ணூர் காட்டு கூட்டு ரோடு அருகே பா.ம.க. சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.மக. பிரமுகர் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்