search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலாப்பட்டில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    காலாப்பட்டில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை

    காலாப்பட்டில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 44). இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த முருகையன் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். மது பழக்கத்தினால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மது பழக்கத்தை மறக்க முருகையனை போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க முயற்சி செய்து வந்தனர். இதற்கு முருகையனும் சம்மதம் தெரிவித்து இருந்தார்.

    இன்று காலை முருகையனை போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க இருந்த நிலையில் மது பழக்கத்தை மறக்க முடியாமல் நேற்று இரவு வீட்டு தோட்டத்தில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×