search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி.தினகரன் ஒரு திருடன்: அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
    X

    டி.டி.வி.தினகரன் ஒரு திருடன்: அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

    டி.டி.வி.தினகரன் ஒரு திருடன் என்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- அனைத்து அமைச்சர்களும் கூடிய விரைவில் மாமியார் வீட்டுக்கு போக போகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறாரே?

    பதில்:- தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும். நான் சொல்லும் பழமொழி, ‘ஊரின் நிலை தெரிந்து உடும்பை தோளில் போட்டானாம் ஒருத்தன்’.

    இதற்கு என்ன அர்த்தம் என்றால், மதில் ஏறி திருட வந்தவன் மக்களை பார்த்தவுடன் தோளில் கிடந்த உடும்பை காட்டி வித்தை காட்டினானாம். தான் திருடன் இல்லை என்று சொல்வதற்காக. அது போலதான் இந்த தினகரன்.

    டி.டி.வி. தினகரனின் வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள். மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் யார் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியில் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா சொன்னது போல் இன்னும் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி செய்யும். தற்போது ஸ்டாலின் உச்சகட்ட விரக்திக்கு சென்று மோசமான வார்த்தைகளால் பேசி வருகிறார். அதே போல் எங்களாலும் பேச முடியும்.

    17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தமிழகத்தை அடகு வைத்ததுதான் மிச்சம். உச்சகட்டமாக இலங்கையில் 1½ லட்சம் ஈழத்தமிழர் கள் கொலை செய்யப்பட்டனர்.

    தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறை வேற்றுவதற்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×