என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
20 நாட்களாக செயற்கை நுரையீரலுடன் உயிர் வாழும் ஆசிரியை: டாக்டர்கள் சாதனை
சென்னை:
புதுச்சேரியை சேர்ந்த பள்ளி ஆசிரியை வித்யா. சாலை விபத்தில் இவர் படுகாயம் அடைந்தார். அவரது அடிவயிறு, இடுப்பு எலும்பு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்தவுடன் அவருக்கு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் குறைந்த ரத்தம் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படுவதை கண்டறிந்தனர். எனவே அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.
இதுகுறித்து டாக்டர்கள் மேலும் ஆய்வு செய்து ஆசிரியை வித்யாவுக்கு செயற்கை நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர். அதை தொடர்ந்து அவருக்கு கூடுதலாக உடல் சார்ந்த ஆக்சிஜன் சுவர் கருவி பொருத்தப்பட்டது.
இக்கருவி செயற்கை நுரையீரல் வழியாக ரத்தத்தை உடல்பகுதிக்கு செலுத்தும் திறன் கொண்டது. இதன் மூலம் நுரையீரலில் உள்ள காயம் ஆறி குணமாகும் வரை இதை தொடர்ந்து செயல்படுத்த டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர்.
செயற்கை நுரையீரல் பொருத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது வித்யாவின் உடல் நிலை சீராக உள்ளது. 37 நாட்களுக்கு பிறகு தற்போது செயற்கை சுவாச கருவி இன்றி அவரால் சுவாசிக்க முடிகிறது. 56 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்