search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    பள்ளிப்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    பள்ளிப்பட்டு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த ஜங்களப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த திருமணம் நேற்று ஆந்திர மாநிலம், சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் நடக்க இருந்தது.

    இது குறித்து ஆந்திர மாநில குழந்தைகள் உதவி மையம் உதவியுடன் அதிகாரிகள் தொடர்பு கொண்டு திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

    பள்ளிப்பட்டு வட்டாட்சியர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் மூலம் திருவள்ளூர் குழந்தைகள் நல குழுமத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.

    Next Story
    ×