என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புங்கள்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் வேண்டுகோள்
மதுரை:
மதுரை ஐகோர்ட்டு கிளை எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 8 நாட்களாக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டு வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மோசஸ், தாஸ் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தலின்பேரில் எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று உள்ளோம். எனவே அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு இன்று மதியம் 2 மணிக்கு மேல் வேலைக்கு திரும்பு மாறு கேட்டுக் கொள்கிறோம்.
நீதிபதிகள் முன்னிலையில் எங்களுடையே கோரிக்கைகளை தெவித்தோம். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நீதிபதிகள் முன்னிலையில் அரசின் தலைமை செயலாளரும், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளும் வருகிற 21-ந் தேதி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அப்போது எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை தெரிவிப்போம். இதற்கு தீர்வு காணாத பட்சத்தில் எங்களுடைய கூட்டமைப்பு கூடி அதற்கு பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்