என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவன் மீட்பு: கை நகங்களை கீறிக்கொண்டதால் பரபரப்பு
Byமாலை மலர்12 Sep 2017 9:15 PM GMT (Updated: 12 Sep 2017 9:15 PM GMT)
தர்மபுரி அருகே நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவன் கை நகங்களை கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி அருகே நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவன் கை நகங்களை கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூட்டுக்காரன்தோப்பை சேர்ந்த 16 வயது மாணவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனிடம் செல்போன் இல்லை.
கடந்த சில நாட்களாக அந்த மாணவனின் தினசரி நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மாணவன் திடீரென தனது ஆள்காட்டிவிரல் நகங்களை குண்டூசியால் கீறியும், குத்தியும் காயத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனிடம் விசாரித்தபோது அவன், தனது நண்பர்கள் சிலரின் செல்போன் மூலம் நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாணவனை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் பெற்றோர் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த மாணவனுடன் சேர்ந்து நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீலதிமிங்கல விளையாட்டு தொடர்பாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள 2 போலீஸ் குழுக்களை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் நீலதிமிங்கல விளையாட்டை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தர்மபுரி அருகே நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவன் கை நகங்களை கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூட்டுக்காரன்தோப்பை சேர்ந்த 16 வயது மாணவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனிடம் செல்போன் இல்லை.
கடந்த சில நாட்களாக அந்த மாணவனின் தினசரி நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மாணவன் திடீரென தனது ஆள்காட்டிவிரல் நகங்களை குண்டூசியால் கீறியும், குத்தியும் காயத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனிடம் விசாரித்தபோது அவன், தனது நண்பர்கள் சிலரின் செல்போன் மூலம் நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாணவனை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் பெற்றோர் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த மாணவனுடன் சேர்ந்து நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீலதிமிங்கல விளையாட்டு தொடர்பாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள 2 போலீஸ் குழுக்களை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் நீலதிமிங்கல விளையாட்டை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X