என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீர்காழியில் தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்து ரெயிலை கவிழ்க்க சதி
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் பாதையில் தண்டவாளத்தின் குறுக்கே லெவல் கிராசிங் அருகே 15 அடி நீள இரும்பு ராடு வைக்கப்பட்டு இருந்தது.
இந்த இரும்பு ராடு கட்டு கம்பியால் இரு புறமும் கட்டப்பட்டு இருந்தது. இதனால் இன்று காலை 4.30 மணிக்கு சீர்காழி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காமல் சீர்காழி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சென்று பார்த்த போது தண்டவாளத்தில் இருந்த இரும்பு ராடை கண்டுபிடித்து அதனை அகற்றினர். அதன் பிறகு 20 நிமிடம் தாமதாக உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. மற்ற ரெயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தண்டாவளத்தில் இரும்பு ராடை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இந்த சதி செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்