search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது
    X

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி பலியாயினர். இந்த 2 பேரை சேர்த்து டெங்குக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, கொடுமுடி, பவானி பகுதியில் மட்டும் 26 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மேலும் 2 குழந்தைகள் டெங்கு நோய்க்கு பலியாகி விட்டனர்.

    அந்தியூர் அடுத்த ஆலம் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஸ் என்பவரின் 4 மாத பெண் குழந்தை கனிகா. இந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சல் அடித்தது. குணமாகாததால் அந்தியூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கனிகாவுக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து கனிகாவை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கனிகா பரிதாபமாக இறந்து விட்டாள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.

    பவானி அருகே உள்ள பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது 6 வயது மகன் தீபக் இவனுக்கும் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் தொடர்ந்து அடித்தது. பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்தபோது அவனுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தீபக் பரிதாபமாக பலியானான்.

    இந்த 2 குழந்தைகளையும் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.
    Next Story
    ×