என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் மறியல்
Byமாலை மலர்7 Sep 2017 7:01 AM GMT (Updated: 7 Sep 2017 7:01 AM GMT)
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இன்று நீட் தேர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
நீட் தேர்வால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மாணவி அனிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் திருநெய்பேர் பள்ளி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இன்று நீட் தேர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X