search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் நீக்கும் வரை ஓயமாட்டோம்: தினகரன்
    X

    எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் நீக்கும் வரை ஓயமாட்டோம்: தினகரன்

    கட்சிக்கும், மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்து வருகிறார்கள். அவர்களை நீக்கும் வரை ஓயமாட்டோம் என தினகரன் கூறியுள்ளார்.
    சென்னை:

    எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ள அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான தினகரன் பெரம்பலூரில் ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    எடப்பாடி பழனிசாமி அரசை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போராளிகள். அவர்களுக்கு என் மீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. கட்சிக்கும், மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்து வருகிறார்கள். அவர்களை நீக்கும் வரை ஓயமாட்டோம்.

    எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கொடுத்தால் மத்திய அரசுக்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுப் போய்விடும்.

    கவர்னரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் உள்ளனர். சொந்த வேலை காரணமாக ஊருக்கு சென்றுள்ளனர்.

    மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது கூட என்னுடன் எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக சிலர் கோ‌ஷம் போட்டனர். அதனை எனக்கு எதிராக போடப்பட்ட கோ‌ஷம் என்று கூறி விட்டனர்.

    இந்த அரசை நாங்கள்தான் உருவாக்கினோம். யாரை முதல்- அமைச்சராக்கினோமோ, இன்று அவரே கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். எனவே கட்சியை காப்பாற்ற எந்த முடிவையும் எடுப்பேன்.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    Next Story
    ×