search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை விடுவித்த தமிழக மீனவர்கள் 76 பேர் இன்று காரைக்கால் வருகை
    X

    இலங்கை விடுவித்த தமிழக மீனவர்கள் 76 பேர் இன்று காரைக்கால் வருகை

    இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 76 பேர் இன்று காரைக்கால் அழைத்து வரப்படுகிறார்கள்.
    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அங்குள்ள சிறைகளில் இருந்தனர். இதேபோல 160-க்கும் மேற்பட்ட படகுகளையும் சிறைபிடித்து வைத்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 43 படகுகள் விடுவிக்கப்பட்டு உள்ளன.

    மீதம் உள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கக்கோரி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளிடமும் வலியுறுத்தி வந்தனர். மத்திய அரசும் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வந்தது.

    இந்த நிலையில், நல்லெண்ண நடவடிக்கையாக, ராமேசுவரத்தை சேர்ந்த 12 பேர், மண்டபத்தை சேர்ந்த 6 பேர், நம்புதாளையைச் சேர்ந்த 4 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 46 பேர், நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 76 மீனவர்களை இலங்கை அரசு கடந்த 31-ந்தேதி விடுதலை செய்தது.

    அதன் பின் 76 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் தவிர நடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். இவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து 80 மீனவர்களையும் இன்று (திங்கட்கிழமை) இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து இந்திய கடலோர காவல்படையினரிடம் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கின்றனர். அதன்பின் அவர்கள் காரைக்காலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    இவர்கள் தவிர அந்நாட்டு சிறையில் நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 மீனவர்களும், கடந்த 31-ந்தேதி சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 8 மீனவர்கள் உள்ளனர்.
    Next Story
    ×