என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலை காலி செய்து சுற்றுலா பயணிகள் ஓட்டம்
Byமாலை மலர்24 Aug 2017 5:20 AM GMT (Updated: 24 Aug 2017 5:20 AM GMT)
புதுவை ஓட்டலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலை சுற்று பயணிகள் காலி செய்து வேறு ஓட்டலுக்கு செல்கிறார்கள்.
புதுச்சேரி:
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள புதுவை வின்ட்பிளவர் ஓட்டலில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தினகரன் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் கொடும்பாவியை எரித்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
நேற்றைய போராட்டம் காரணமாக ஓட்டலில் இருந்து 100 மீட்டருக்கு முன்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. ஓட்டலுக்கு வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
மேலும் ஓட்டலின் பிரதான நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தாண்டி உள்ளே செல்பவர்களை பல்வேறு விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள்.
ஓட்டலில் தங்கி இருக்கும் மற்ற சுற்றுலா பயணிகள் வெளியில் வந்து சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு ஓட்டலுக்குள் செல்லும்போது இதேபோல சோதனைக்கும், விசாரணைக்கும் ஆளாகிறார்கள்.
தனிமையில் அமைதியான முறையில் தங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதுபோன்ற ஓட்டல்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் இங்குள்ள கெடுபிடியால் அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஓட்டலில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் ஓட்டல் வளாகத்துக்குள்ளும் அமைதியான சூழ்நிலை இல்லை.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பலர் ஓட்டலை காலி செய்துவிட்டு வேறு ஓட்டலுக்கு சென்றுவிட்டனர். இன்றும் இதே நிலைமை நீடித்தால் இந்த ஓட்டலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளும் இங்கு தங்காமல் வெளியேறும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள புதுவை வின்ட்பிளவர் ஓட்டலில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தினகரன் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் கொடும்பாவியை எரித்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
நேற்றைய போராட்டம் காரணமாக ஓட்டலில் இருந்து 100 மீட்டருக்கு முன்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. ஓட்டலுக்கு வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
மேலும் ஓட்டலின் பிரதான நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தாண்டி உள்ளே செல்பவர்களை பல்வேறு விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள்.
ஓட்டலில் தங்கி இருக்கும் மற்ற சுற்றுலா பயணிகள் வெளியில் வந்து சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு ஓட்டலுக்குள் செல்லும்போது இதேபோல சோதனைக்கும், விசாரணைக்கும் ஆளாகிறார்கள்.
தனிமையில் அமைதியான முறையில் தங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதுபோன்ற ஓட்டல்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் இங்குள்ள கெடுபிடியால் அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஓட்டலில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் ஓட்டல் வளாகத்துக்குள்ளும் அமைதியான சூழ்நிலை இல்லை.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பலர் ஓட்டலை காலி செய்துவிட்டு வேறு ஓட்டலுக்கு சென்றுவிட்டனர். இன்றும் இதே நிலைமை நீடித்தால் இந்த ஓட்டலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளும் இங்கு தங்காமல் வெளியேறும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X