என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
Byமாலை மலர்23 Aug 2017 7:41 AM GMT (Updated: 23 Aug 2017 7:41 AM GMT)
நெல்லை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து பணகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார்? அவரது பெயர் விபரம் என்ன? என விசாரணை நடத்தினர். அதில் கொலையுண்டவர் நாகர்கோவில் தக்கலையை சேர்ந்த பிரேம் வின்ஸ்டர் (வயது36) என்பதும் தெரிய வந்தது. வடலிவிளையில் பிரேம் வின்ஸ்டருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அவ்வப்போது இங்கு வந்து செல்லும் அவர் அங்குள்ள தோட்டத்தில் தங்குவாராம். அதன்படி நேற்று மாலை தோட்டத்திற்கு வந்த பிரேம் வின்ஸ்டர் அங்கு தங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிரேம் வின்ஸ்டரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரேம் வின்ஸ்டரை கொன்றவர்கள் யார்? முன் விரோதத்தில் இச்சம்பவம் நடந்ததா? என பணகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார்? அவரது பெயர் விபரம் என்ன? என விசாரணை நடத்தினர். அதில் கொலையுண்டவர் நாகர்கோவில் தக்கலையை சேர்ந்த பிரேம் வின்ஸ்டர் (வயது36) என்பதும் தெரிய வந்தது. வடலிவிளையில் பிரேம் வின்ஸ்டருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அவ்வப்போது இங்கு வந்து செல்லும் அவர் அங்குள்ள தோட்டத்தில் தங்குவாராம். அதன்படி நேற்று மாலை தோட்டத்திற்கு வந்த பிரேம் வின்ஸ்டர் அங்கு தங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிரேம் வின்ஸ்டரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரேம் வின்ஸ்டரை கொன்றவர்கள் யார்? முன் விரோதத்தில் இச்சம்பவம் நடந்ததா? என பணகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X