என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2½ கோடி போதை பொருள் பறிமுதல்
Byமாலை மலர்23 Aug 2017 1:50 AM GMT (Updated: 23 Aug 2017 1:50 AM GMT)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2½ கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல்காரரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் இருந்து சிலர் போதை பொருட்களை கடத்துவதாக சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சாதாரண உடையில் பதுங்கி இருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் அந்த பகுதிக்கு ஆட்டோவில் வந்த ஒரு நபர் பெரிய அட்டை பெட்டியுடன் கடற்கரையை நோக்கி சென்றார்.
இதனை தொடர்ந்து சுங்கத்துறையினர் அந்த நபரை சுற்றி வளைத்தனர். அவர் பார்சலை கீழே போட்டு கடலுக்குள் குதித்து நீந்தி சென்று தப்பிக்க முயன்றார். அவரை எச்சரிக்கும் வகையில் சுங்கத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஆனாலும் அந்த நபர் நிற்காமல் கடலுக்குள் இடுப்பளவு தண்ணீர் உள்ள பகுதிக்கு நீந்தி சென்று, அங்கு இருந்த ஒரு படகில் ஏறி நடுக்கடலுக்குள் தப்பிக்க முயன்றார்.
கரையில் நின்ற சுங்கத்துறை அதிகாரிகள் படகை நோக்கி 4 முறை சுட்டனர். துப்பாக்கி தோட்டாக்கள் படகை துளைத்து உள்ளது. ஆனாலும் அந்த நபர் படகில் இருந்த மற்றொருவருடன் சேர்ந்து கடலுக்குள் தப்பி சென்று விட்டார்.
இதனையடுத்து கடற்கரைக்கு அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்து, அவரது ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
அந்த நபர் விட்டுச்சென்ற பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 24 கிலோ எடை கொண்ட, ரூ.2½ மதிப்புள்ள ‘ஹசீஷ்‘ என்னும் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டோவில் பார்சலுடன் வந்தது தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தஸ்தகிர் என ரமேஷ் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் ரமேஷ், தஸ்தகிர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது போதை பொருளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்ததும், அதனை நடுக்கடலில் எந்த இடத்தில் வைத்து பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற விவரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தஸ்தகிரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் இருந்து சிலர் போதை பொருட்களை கடத்துவதாக சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சாதாரண உடையில் பதுங்கி இருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் அந்த பகுதிக்கு ஆட்டோவில் வந்த ஒரு நபர் பெரிய அட்டை பெட்டியுடன் கடற்கரையை நோக்கி சென்றார்.
இதனை தொடர்ந்து சுங்கத்துறையினர் அந்த நபரை சுற்றி வளைத்தனர். அவர் பார்சலை கீழே போட்டு கடலுக்குள் குதித்து நீந்தி சென்று தப்பிக்க முயன்றார். அவரை எச்சரிக்கும் வகையில் சுங்கத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஆனாலும் அந்த நபர் நிற்காமல் கடலுக்குள் இடுப்பளவு தண்ணீர் உள்ள பகுதிக்கு நீந்தி சென்று, அங்கு இருந்த ஒரு படகில் ஏறி நடுக்கடலுக்குள் தப்பிக்க முயன்றார்.
கரையில் நின்ற சுங்கத்துறை அதிகாரிகள் படகை நோக்கி 4 முறை சுட்டனர். துப்பாக்கி தோட்டாக்கள் படகை துளைத்து உள்ளது. ஆனாலும் அந்த நபர் படகில் இருந்த மற்றொருவருடன் சேர்ந்து கடலுக்குள் தப்பி சென்று விட்டார்.
இதனையடுத்து கடற்கரைக்கு அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்து, அவரது ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
அந்த நபர் விட்டுச்சென்ற பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 24 கிலோ எடை கொண்ட, ரூ.2½ மதிப்புள்ள ‘ஹசீஷ்‘ என்னும் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டோவில் பார்சலுடன் வந்தது தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தஸ்தகிர் என ரமேஷ் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் ரமேஷ், தஸ்தகிர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது போதை பொருளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்ததும், அதனை நடுக்கடலில் எந்த இடத்தில் வைத்து பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற விவரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தஸ்தகிரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X