search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி உரிமையை காப்பாற்றியவர் ஜெயலலிதா: வைகோ புகழாரம்
    X

    காவிரி உரிமையை காப்பாற்றியவர் ஜெயலலிதா: வைகோ புகழாரம்

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்ததில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
    அரியலூர்:

    அரியலூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி உரிமையை ஜெயலலிதா போல் காப்பாற்றியவர் யாரும் இல்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததில்லை. அதை தற்போதைய அரசு தவறவிட்டுள்ளது. நீட் தேர்வு பிரச்சனையிலும் இதே நிலைதான் உள்ளது.

    தற்போது தமிழகத்தின் அனைத்து உமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×