என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே காதல் திருமணம் செய்த பேராசிரியை தற்கொலை
Byமாலை மலர்19 Aug 2017 4:50 AM GMT (Updated: 19 Aug 2017 4:50 AM GMT)
கோபி அருகே காதல் திருமணம் செய்த பேராசிரியை கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.ஈ. படித்துள்ளார். இவரது மனைவி பெயர் மஞ்சுளா (26). இவரும் எம்.ஈ. படித்தவர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்தார்.
இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6.6.2016 அன்று திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதியினருக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் பேராசிரியை மஞ்சுளா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மஞ்சுளா வீட்டினுள் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பேராசிரியை தற்கொலை குறித்து கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.ஈ. படித்துள்ளார். இவரது மனைவி பெயர் மஞ்சுளா (26). இவரும் எம்.ஈ. படித்தவர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்தார்.
இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6.6.2016 அன்று திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதியினருக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் பேராசிரியை மஞ்சுளா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மஞ்சுளா வீட்டினுள் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பேராசிரியை தற்கொலை குறித்து கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X