என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: கிருஷ்ணகிரி - தர்மபுரி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்18 Aug 2017 7:28 AM GMT (Updated: 18 Aug 2017 7:28 AM GMT)
கே.ஆர்.பி. அணையின் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி உள்ளது. அந்த அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு வருகிறது. கே.ஆர்.பி. அணையின் கொள்ளளவு 52 அடி ஆகும்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 648 கன அடி தண்ணீர் வருகிறது.
இந்த தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுரை கூறி உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி உள்ளது. அந்த அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு வருகிறது. கே.ஆர்.பி. அணையின் கொள்ளளவு 52 அடி ஆகும்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 648 கன அடி தண்ணீர் வருகிறது.
இந்த தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுரை கூறி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X