search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி
    X

    விழுப்புரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி

    விழுப்புரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள கல்பர்ட் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் சின்னப்ப ராபர்ட் (வயது 32). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த சில நாட்களாகவே சின்னப்ப ராபர்ட் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அடிக்கடி காய்ச்சலும் இருந்து வந்தது. இதையடுத்து சின்னப்ப ராபர்ட் விழுப்புரம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னப்ப ராபர்ட்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சின்னப்ப ராபர்ட் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்ட பொதுமக்களிடையே பெரும் பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×