என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே 3-வது திருமணம் செய்வதற்காக பெற்ற குழந்தையை கொன்ற பெண்
Byமாலை மலர்16 Aug 2017 9:57 AM GMT (Updated: 16 Aug 2017 9:57 AM GMT)
ராஜபாளையம் அருகே 3-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி முத்து. இவர்களது மகள் ராமலட்சுமி (வயது 19).இவருக்கும், நெல்லை மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்தவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
திருமணமான ஒரு வாரத்திற்குள் ராமலட்சுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே கணவர் வீட்டார் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமலட்சுமி கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த கணவர் வீட்டார் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தியதில் திருமணத்திற்கு முன்பு ராமலட்சுமி தெற்கு வெங்காநல்லூரைச் சேர்ந்த கில்லிகோட்டன் மகன் கருப்பசாமி (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பமானது தெரியவந்தது.
இதையடுத்து கணவர் அவரை விட்டு பிரிந்து செல்ல காதலன் கருப்பசாமி, ராமலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் முக்தாநதி கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு ராமலட்சுமிக்கு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கருப்பசாமி மட்டும் ஒருமுறை பார்க்க வந்தார். அதன் பிறகு அவரும், அவரது குடும்பத்தினரும் குழந்தையை பார்க்க வரவில்லை.
பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை. இதனால் ராமலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில் ராமலட்சுமியின் தாய் முத்து தனது மகளை 3-வதாக திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார். அதற்கு பிறந்த குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணிய ராமலட்சுமியும், முத்துவும் இரக்கமின்றி பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து ராமலட்சுமி, முத்துவை கைது செய்தனர்.
3-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி முத்து. இவர்களது மகள் ராமலட்சுமி (வயது 19).இவருக்கும், நெல்லை மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்தவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
திருமணமான ஒரு வாரத்திற்குள் ராமலட்சுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே கணவர் வீட்டார் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமலட்சுமி கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த கணவர் வீட்டார் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தியதில் திருமணத்திற்கு முன்பு ராமலட்சுமி தெற்கு வெங்காநல்லூரைச் சேர்ந்த கில்லிகோட்டன் மகன் கருப்பசாமி (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பமானது தெரியவந்தது.
இதையடுத்து கணவர் அவரை விட்டு பிரிந்து செல்ல காதலன் கருப்பசாமி, ராமலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் முக்தாநதி கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு ராமலட்சுமிக்கு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கருப்பசாமி மட்டும் ஒருமுறை பார்க்க வந்தார். அதன் பிறகு அவரும், அவரது குடும்பத்தினரும் குழந்தையை பார்க்க வரவில்லை.
பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை. இதனால் ராமலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில் ராமலட்சுமியின் தாய் முத்து தனது மகளை 3-வதாக திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார். அதற்கு பிறந்த குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணிய ராமலட்சுமியும், முத்துவும் இரக்கமின்றி பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து ராமலட்சுமி, முத்துவை கைது செய்தனர்.
3-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X