என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக திருமாவளவன் போராட்டம்
Byமாலை மலர்16 Aug 2017 6:56 AM GMT (Updated: 16 Aug 2017 6:56 AM GMT)
டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய - மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்:ஏ., முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாலசிங்கம், சித்தார்த்தன், ராசகுமார், கம்யூனிஸ்டு கட்சி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய - மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்:ஏ., முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாலசிங்கம், சித்தார்த்தன், ராசகுமார், கம்யூனிஸ்டு கட்சி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X