search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்த்தமற்ற கருத்துக்களை கூறி கமல்ஹாசன் காமெடி நடிகராகி விட்டார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X

    அர்த்தமற்ற கருத்துக்களை கூறி கமல்ஹாசன் காமெடி நடிகராகி விட்டார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

    சுய விளம்பரத்திற்காக அர்த்தமற்ற கருத்துக்களை கூறி கமலஹாசன் காமெடி நடிகராகி விட்டார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டி உள்ளார்.
    கோவில்பட்டி:

    தமிழ்நாட்டில் ஊழல்கள் நடைபெறுவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-



    மக்கள் மத்தியில் சிறந்த நடிகராக மட்டுமே கமல்ஹாசன் அன்று இருந்தார். ஆனால் இன்று அவர் தனது சுய விளம்பரத்திற்காக அர்த்தமற்ற கருத்துக்களை கூறி காமெடி நடிகராக மாறிவிட்டார். அரசியல் சாசன சட்டம் என்ன என்பதே அவருக்கு தெரியாது. சுய விளம்பரத்திற்காக அவர் வாய்க்கு வந்தபடி எல்லாம் கருத்துக்களை கூறி வருகிறார்.



    தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி ஏழை, எளிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏராளமான ஊழல் குற்றங்கள் நடக்கிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கூறாதது ஏன்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகளுக்கு அரசியல் தெரியும், ஆனால் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாததால் அர்த்தமற்ற கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்.

    அ.தி.மு.க. பல சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றி ஆட்சி நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×