என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு ஜீப்பில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்14 Aug 2017 4:26 AM GMT (Updated: 14 Aug 2017 4:26 AM GMT)
புதுவையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு ஜீப்பில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதிகாரியின் பேரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த ஜீப்பில் 54 மதுபாட்டில்கள் இருந்தது.
இதையடுத்து ஜீப்பில் வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கரியூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 19), கலைச்செல்வன் (18), மற்றொரு கிருஷ்ணமூர்த்தி (20) ஆகியோர் என்பதும், புதுவையில் இருந்து அரசு ஜீப்பில் அவர்கள் மதுபாட்டில்களை கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மதுபாட்டில்கள் கடத்துவதற்கு அரசு ஜீப் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றுபவர் கோவிந்தன். இவருக்கு வேளாண்மைத் துறையின் பணிகளை கவனித்துக்கொள்வதற்காக அரசு சார்பில் ஜீப் வழங்கப்பட்டிருந்தது.
இவருடைய பேரனான கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர்களுடன் அரசு ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தியது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரியின் பேரன் கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த ஜீப்பில் 54 மதுபாட்டில்கள் இருந்தது.
இதையடுத்து ஜீப்பில் வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கரியூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 19), கலைச்செல்வன் (18), மற்றொரு கிருஷ்ணமூர்த்தி (20) ஆகியோர் என்பதும், புதுவையில் இருந்து அரசு ஜீப்பில் அவர்கள் மதுபாட்டில்களை கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மதுபாட்டில்கள் கடத்துவதற்கு அரசு ஜீப் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றுபவர் கோவிந்தன். இவருக்கு வேளாண்மைத் துறையின் பணிகளை கவனித்துக்கொள்வதற்காக அரசு சார்பில் ஜீப் வழங்கப்பட்டிருந்தது.
இவருடைய பேரனான கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர்களுடன் அரசு ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தியது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரியின் பேரன் கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X