என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாங்கண்ணி லாட்ஜில் கணவருடன் விஷம் குடித்த பெண் மரணம்
Byமாலை மலர்14 Aug 2017 4:19 AM GMT (Updated: 14 Aug 2017 4:19 AM GMT)
வேளாங்கண்ணி லாட்ஜில் கடன் தொல்லையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பிரபாலூர் சந்தியாகப்பா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா என்கிற செல்வி (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் கடன் தொல்லையில் இருந்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் குழந்தைகளை தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு வேளாங்கண்ணிக்கு சென்றனர்.
பின்னர் அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இதையடுத்து இருவரும் இரவு விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்தனர். இதை பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் செல்வி இறந்து விட்டதாக கூறினர். பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பிரபாலூர் சந்தியாகப்பா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா என்கிற செல்வி (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் கடன் தொல்லையில் இருந்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் குழந்தைகளை தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு வேளாங்கண்ணிக்கு சென்றனர்.
பின்னர் அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இதையடுத்து இருவரும் இரவு விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்தனர். இதை பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் செல்வி இறந்து விட்டதாக கூறினர். பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X