என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: உறவினர்கள் 2 பேர் கைது
Byமாலை மலர்13 Aug 2017 2:43 PM GMT (Updated: 13 Aug 2017 2:43 PM GMT)
காட்பாடியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
காட்பாடி தாராபடவேடு 1-வது மண்டல அலுவலக பின்புற பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது உறவினர் மகனுக்கு 17 வயதாகிறது.
இருவரும் சேர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவரின் 11 வயது மற்றும் 8 வயது மகள்களுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால், சிறுமிகளின் உடல் நிலை பாதித்தது. பெற்றோர், மகள்களை டாக்டரிடம் அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அப்போது, சிறுமிகள் பாலியல் துன்புறத்தலால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து, காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X