search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் நகராட்சியில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
    X

    காஞ்சீபுரம் நகராட்சியில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

    காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் 7 அடி உயர முழு உருவ எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி திறந்து வைக்கிறார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் 7 அடி உயர முழு உருவ எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகள் திறக்கப்பட உள்ளது.



    இந்த சிலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை வைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளின் உயரம், அதன் மாதிரி வடி வங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சிலைகளை வைப்பதற்கான இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், வி.சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 5 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியை நகராட்சி தனி அலுவலர் சர்தார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் என்ஜினீயர் மகேந்திரன், நகரமைப்பு அலுவலர் முரளி, உதவி பொறியாளர் சத்தியசீலன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணி காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

    Next Story
    ×