என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பழனி அருகே போலி டாக்டர்கள் 4 பேர் கைது
பழனி:
பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் பழனி சப்-கலெக்டர் வினித், தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் நேற்று பழனி, ஆயக்குடி, கோதை மங்கலம், அ.கலையம்புத்தூர், பாப்பம்பட்டி, மானூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளை திடீர் ஆய்வு செய்தனர். புது ஆயக்குடியில் வீட்டில் மருத்துவமனை நடத்தி வந்த அன்னமேரி (வயது 58) என்பவர் நர்சாக பணியாற்றி பின்னர் ஆஸ்பத்திரியே நடத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். வீட்டில் இருந்த ஏராளமான மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பாப்பம் பட்டியைச் சேர்ந்த ராஜந்திரன், மானூரைச் சேர்ந்த பாலு, சந்தோஷ், அ.கலையம்புத்தூரைச சேர்ந்த பிரபு, கோதை மங்கலத்தைச் சேர்ந்த துரைராஜ் ஆகியோரும் போலி டாக்டர்களாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தது தெரிய வரவே அந்த ஆஸ்பத்திரிகளுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
இதில் ராஜேந்திரன், சந்தோஷ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். மற்றும் 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 4 பேர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்