என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் ஆட்சியின் போது தி.மு.க. ‘நீட்’ தேர்வை எதிர்க்காதது ஏன்?: தம்பித்துரை
Byமாலை மலர்27 July 2017 8:36 AM GMT (Updated: 27 July 2017 8:36 AM GMT)
காங்கிரஸ் ஆட்சியின் போது தி.மு.க. நீட் தேர்வை எதிர்க்காதது ஏன் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவனியாபுரம்:
சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய மக்களால் போற்றப்படும் அப்துல்கலாமிற்கு ராமேசுவரத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் செல்கிறேன். பீகாரில் நிதிஷ்குமாரின் முடிவை பார்க்கும் போது அரசியலில் எந்த நேரத்திலும், எந்த மாற்றமும் நடக்கலாம் என தோன்றுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது உத்திர பிரதேச மாநிலத்தில் ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. அன்று ‘நீட்’ தேர்வை கண்டிக்காத தி.மு.க. இன்று ‘நீட்’ தேர்வை எதிர்ப்பதாக கூறுகிறது.
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. கலாம் நினைவு நாளில் மனிதச்சங்கிலி போராட்டம் அறிவிப்பு மக்களை திசை திருப்பும் செயலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய மக்களால் போற்றப்படும் அப்துல்கலாமிற்கு ராமேசுவரத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் செல்கிறேன். பீகாரில் நிதிஷ்குமாரின் முடிவை பார்க்கும் போது அரசியலில் எந்த நேரத்திலும், எந்த மாற்றமும் நடக்கலாம் என தோன்றுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது உத்திர பிரதேச மாநிலத்தில் ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. அன்று ‘நீட்’ தேர்வை கண்டிக்காத தி.மு.க. இன்று ‘நீட்’ தேர்வை எதிர்ப்பதாக கூறுகிறது.
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. கலாம் நினைவு நாளில் மனிதச்சங்கிலி போராட்டம் அறிவிப்பு மக்களை திசை திருப்பும் செயலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X