என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
12 வயது சிறுமி கர்ப்பம்: கைதான டிரைவர் சேலம் ஜெயிலில் அடைப்பு
Byமாலை மலர்24 July 2017 10:47 AM GMT (Updated: 24 July 2017 10:47 AM GMT)
நெகமம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி:
நெகமம் அருகே கூலித்தொழில் செய்து வருபவரின் 12 வயது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(55). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி ஆறுச்சாமியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆறுச்சாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கத்துவீட்டில் வசித்து வந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சிக்கன் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிச்சென்ற சிறுமியை ஆறுச்சாமி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அதை வீட்டில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வாந்தி எடுத்ததை அடுத்து பெற்றோர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
பெற்றோர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் ஆறுச்சாமிதான் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆறுச்சாமியை கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான ஆறுச்சாமி சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நெகமம் அருகே கூலித்தொழில் செய்து வருபவரின் 12 வயது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(55). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி ஆறுச்சாமியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆறுச்சாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கத்துவீட்டில் வசித்து வந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சிக்கன் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிச்சென்ற சிறுமியை ஆறுச்சாமி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அதை வீட்டில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வாந்தி எடுத்ததை அடுத்து பெற்றோர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
பெற்றோர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் ஆறுச்சாமிதான் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆறுச்சாமியை கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான ஆறுச்சாமி சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X