search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு
    X

    ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆகஸ்டு 14-ந் தேதி இரவு 12 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளையன் கூறினார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் புதூரில் இன்று நடந்தது. இதில் சங்கத்தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ஆகஸ்டு 13-ந் தேதி நெல்லையில் நடக்கும் தென் மண்டல மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆகஸ்டு 14-ந் தேதி இரவு 12 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.க்கு தீர்வு காணாத பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    Next Story
    ×