search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூர் தீ விபத்து: விசாரணை நடத்த தீபா கோரிக்கை
    X

    கொடுங்கையூர் தீ விபத்து: விசாரணை நடத்த தீபா கோரிக்கை

    கொடுங்கையூரில் தீ விபத்து நடந்த கட்டிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? கடைக்கு உரிய அனுமதி உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஜெ.தீபா அணியின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொடுங்கையூர் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலியானது பற்றி அறிந்ததும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், தீ விபத்து நடந்த கட்டிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? கடைக்கு உரிய அனுமதி உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும். கட்டிடங்களை ஒழுங்கு முறைப்படுத்தி இதுபோன்ற தீ விபத்துகள் தடுக்க தமிழக அரசு முன் வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×