என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: தண்ணீர் வரத்து அதிகரித்ததால் களக்காடு தலையணை இன்று திறப்பு
Byமாலை மலர்28 Jun 2017 7:39 AM GMT (Updated: 28 Jun 2017 7:39 AM GMT)
மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை தலையணை திறக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. தென் மாவட்டங்களில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் களக்காடு பகுதியில் வறட்சி ஏற்பட்டது. ஆறு, குளங்கள், கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை இன்றி வறட்சி நிலவியது. இதனால் நீர்நிலைகள் வற்றியது. தலையணையிலும் தண்ணீர் வற்றியது.
இதையடுத்து கடந்த மே 1-ந் தேதி தலையணை மூடப்பட்டது. தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் உத்தரவின் பேரில் இன்று காலை தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. தென் மாவட்டங்களில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் களக்காடு பகுதியில் வறட்சி ஏற்பட்டது. ஆறு, குளங்கள், கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை இன்றி வறட்சி நிலவியது. இதனால் நீர்நிலைகள் வற்றியது. தலையணையிலும் தண்ணீர் வற்றியது.
இதையடுத்து கடந்த மே 1-ந் தேதி தலையணை மூடப்பட்டது. தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் உத்தரவின் பேரில் இன்று காலை தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X