search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் தீ விபத்து: 10 கடைகள் எரிந்து சாம்பல்
    X

    உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் தீ விபத்து: 10 கடைகள் எரிந்து சாம்பல்

    உளுந்தூர்பேட்டையில் நேற்று நள்ளிரவில் திருமண அழைப்பு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 கடைகள் எரிந்து சாம்பலானது.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் சாலையோரத்தில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.

    சிறிது நேரத்தில் அந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்.

    கடைகளில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் 10 கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    திருமண அழைப்பு நிகழ்ச்சிக்கு பட்டாசு வெடித்தபோது ஒரு கடையில் தீப்பொறி விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×