search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே லாரி மோதியதில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பேர் காயம்
    X

    காரைக்குடி அருகே லாரி மோதியதில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பேர் காயம்

    காரைக்குடி அருகே இன்று காலை நடந்த விபத்தில் லாரி மோதியதில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
    காரைக்குடி:

    மதுரையில் இருந்து காரைக்குடிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. காளையார்கோவிலைச் சேர்ந்த பொன்முருகன் (வயது 45) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    இந்த பஸ் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திருமயத்தில் இருந்து தேவகோட்டை நோக்கி சல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ் சாலையிலேயே கவிழ்ந்தது.

    காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் கவிழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர்.

    குன்றக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் காயத்ரி (14), வினோ ரிச்சிதா (14), லியாசினி (9), காமாட்சி (14) ஆகிய மாணவிகளும், கார்த்திகேயன் (17) என்ற மாணவனும் காயம் அடைந்தனர்.

    பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பங்கஜவள்ளி (45) உள்பட 20-க்கும் மேற்பட்டோரும் காயம் அடைந்தனர். அனைவரும் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×