என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவைக்கு சுற்றுலா வந்த வெளிமாநில பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த ஆட்டோ டிரைவர்
புதுச்சேரி:
ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் சுவாதி (வயது 26), ஜோதி (30), தனுஸ்ரீ (32). இவர்கள் 3 பேரும் அங்குள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.
நேற்று இரவு அவர்கள் அண்ணா சாலையில் ஜாலியாக பேசிக் கொண்டு நடந்து வந்தனர்.
அப்போது ஆட்டோவுடன் நின்றிருந்த வாலிபர் திடீரென சுவாதியை வழிமறித்து அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் சத்தமிட்டனர்.
உடனே அந்த வாலிபர் ஆட்டோவுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆனால், அந்த பெண்கள் அந்த ஆட்டோ நம்பரை குறித்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி ஆகியோர் அந்த ஆட்டோ நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த ஆட்டோ புதுவை சின்னையாபுரம் அக்கா சாமி கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் (38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இன்று காலை அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்டாலினை கைது செய்தனர். ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி கூறும்போது, புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நாங்கள் முழு பாதுகாப்பு அளித்து வருகிறோம். சுற்றுலா பயணிகளுக்கு யாரேனும் இடையூறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்