search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை
    X

    புதுக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை

    புதுக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மண மேல்குடி பத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 39). இவர் மீது மண மேல்குடி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட 9 வழக்குகள் உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜேசுராஜூக்கும், அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஜேசுராஜ், குமாரை சரமாரி தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசுராஜை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    கடந்த 22-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர், தன்னை சிறைக்கு அனுப்பிய குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்றிரவு பத்தக்காடு வண்ணாங்குளம் பகுதியில் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜ் கமல், சிவப்பிரகாசம் ஆகியோர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஜேசுராஜ் மற்றும் அவரது தம்பி ஞானப்பிரகாசம் ஆகியோர் வந்தனர். உடனே ஜேசுராஜ், குமாரிடம் என்னை ஜெயிலுக்கு அனுப்பியது நீதானே, உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    தகராறு முற்றவே ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் ஜேசுராஜ் மற்றும் ஞானப்பிரகாசத்தை சரமாரி வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ஜேசுராஜ் இறந்தார். ஞானப்பிரகாசம் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மணமேல்குடி போலீசார் ஜேசுராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்த குமார், ராஜ்கமல், சிவப்பிரகாசம் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட ஜேசுரா ஜூக்கு திருமணமாகி பொன் சியா என்ற மனைவியும், ஜோஸ்வா என்ற மகனும் உள்ளனர். பொன்சியா கணவரை பிரிந்து மகனுடன் கோவையில் வசித்து வருகிறார்.

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜேசுராஜை கடந்த 2015-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் குமாருடன் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×