search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்: நெடுவாசல் கிராம மக்கள் நாளை அவசர ஆலோசனை
    X

    ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்: நெடுவாசல் கிராம மக்கள் நாளை அவசர ஆலோசனை

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக 74-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசலை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 74-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நேற்று நடந்த போராட்டத்தில் மக்களின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததை சுட்டிக்காட்டும் விதமாக போராட்டம் நடைபெற்றது.



    இதைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசுதான் ரத்து செய்ய வேண்டும் என்கிறது மத்திய அரசு. ஆனால் திட்டத்தை அறிவித்த மத்திய அரசுதான் ரத்து செய்ய வேண்டும் என்கிறது மாநில அரசு. இதில் யாருக்கு அதிகாரம் உள்ளது எனத்தெரியவில்லை.

    எனவே இந்த திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வி.ஆர்.கே. திருமண மகாலில் நாளை 25-ந்தேதி காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் நெடுவாசலை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு கட்சிகள், விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    Next Story
    ×